Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்டென்ட் கிடைக்காமல் அல்லல்படும் பிக்பாஸ்... மீண்டும் நாடா காடா டாஸ்க்!

கன்டென்ட் கிடைக்காமல் அல்லல்படும் பிக்பாஸ்... மீண்டும் நாடா காடா டாஸ்க்!
, புதன், 13 ஜனவரி 2021 (12:27 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனிதா எண்ட்ரி ஆகும் காட்சிகள் உள்ளன. ஏற்கனவே விருந்தினர்களாக வந்த ஹவுஸ்மேட்ஸ் மூலம் அனிதாவின் தந்தை இறந்தது அனைத்து போட்டியாளர்களுக்கும் தெரிந்து இருந்த நிலையில் அனிதா வந்தவுடன் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறும் காட்சிகள் இடம்பெற்றது. 
 
குறிப்பாக வேல்முருகன் ’இனிமேல் உனக்கு தந்தை நாங்கள்தான் கவலைப்படாமல் இரு’ என்று கூறுகிறார். எல்லோரும் அனிதாவை கட்டியணைத்து ’தந்தையை நினைத்து கவலைப் படாதே என்று ஆறுதல் கூறும் காட்சிகள் இருந்தது.
 
ஆனால் முதல் புரமோவில் ஒரு காட்சியில் கூட ஆரியை எங்கேயும் காணவில்லை என்பது சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து எங்கடா என் தலைவன் ஆரி? என் தலைவன் இல்லாமல் என்னடா புரோமோ என்று விஜய் டிவியை ஆரி ஆர்மியினர் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் மீண்டும்  நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டு கன்டென்ட் கிடைக்காமல் அரைச்ச மாவையே திரும்ப அரைகின்றனர். இது ஆடியன்ஸை சலிப்படைய வைத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க ஏன் இவ்ளோவ் அழகா இருக்கீங்க...? சேலையில் செமயா இருக்கும் சாக்ஷி!