Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் படத்தை நான் எடுத்திருந்தால் நான் சொதப்பி இருப்பேன்… பாரதிராஜா பேச்சு!

பொன்னியின் செல்வன் படத்தை நான் எடுத்திருந்தால் நான் சொதப்பி இருப்பேன்… பாரதிராஜா பேச்சு!
, வியாழன், 30 மார்ச் 2023 (14:03 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “இந்த படத்தை நான் இயக்கி இருந்தால் சொதப்பி இருப்பேன். ஆனால் மணிரத்னம் சிறப்பாக எடுத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடுமையான வொர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா!