Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னத்துக்கு வரலாற்று படம் எடுக்க வராதுன்னு சொன்னேன்.. அமைச்சர் துரைமுருகன் ஓபன் டாக்!

மணிரத்னத்துக்கு வரலாற்று படம் எடுக்க வராதுன்னு சொன்னேன்.. அமைச்சர் துரைமுருகன் ஓபன் டாக்!
, வியாழன், 30 மார்ச் 2023 (08:24 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் லைகா சுபாஷகரனோடு வந்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “இந்த நாவலை நான் பல முறை படித்துள்ளேன். இதை மணிரத்னம் படமாக எடுக்கப் போகிறார் என்று கேள்விப் பட்டவுடன் சுபாஷ்கரனிடம் ‘மணிரத்னத்துக்கு வரலாற்று படம் சரிபட்டு வராது’ எனக் கூறினேன். ஆனால் படம் வெளியாகி பார்த்தபின்னர் போன் செய்து அவருக்கு சல்யூட் வைத்தேன்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொமான்ஸ் வருமான்னு கேட்டார் மணிரத்னம்.. அதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு- புலம்பிய நடிகர்!