Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரபுநாடுகளை தீவிரவாதிகளின் புகலிடமாகக் காட்டுவதா? பெல்பாட்டம் படத்தை தடை செய்ய இதுதான் காரணம்!

Advertiesment
webdunia
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் பெல்பாட்டம்.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலங்களில் இதுவரை 915 திரையரங்குகள் முன்பதிவு செய்துள்ளன. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகும் மிகப்பெரிய படமாக பெல்பாட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலிஸானது.

இந்நிலையில் இந்த படத்தை கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட அரபு நாடுகள் தடை செய்தன. அதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் அரபுநாடுகளில் பதுங்கி இருப்பது போன்று காட்சிகள் படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என அரபு நாடுகளில் குரல்கள் எழுந்தன. இந்த படத்திலும் அதுபோல காட்சிகள் இருந்ததாலேயே படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் விஜய் படக்குழுவோடு இனைந்த சமுத்திரக்கனி!