Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயலானில் அவதார் படக் கலைஞர்கள்… ரிலீஸ் வேலைகளை தொடங்கும் படக்குழு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:16 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் அயலான் நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான RD ராஜா தயாரித்தார். பின்னர் அவரிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தயாரித்தது.

கடந்த ஆண்டு ஷூட்டிங் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது அந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இப்போது வரை உறுதியாகவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் கிராபிக்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும், இதற்காக அவதார் 2 படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments