Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
, புதன், 7 டிசம்பர் 2022 (15:07 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. ஆனால் ஷுட்டிங் நிறுத்தம் பற்றி பேசிய இயக்குனர் அஸ்வின் “மழைக் காரணமாகதான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஹாலிவுட்டைச் சேர்ந்த யானிக் பென் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல தமிழ் படங்களுக்கும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயவு செஞ்சு அத பண்ணாதீங்க… துணிவு பாடல் ஆசிரியர் ஆதங்கம்!