Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முந்தானை முடிச்சு தயாரிப்பாளர் மாற்றமா? களத்தில் குதிக்கும் ஏவிஎம்!

முந்தானை முடிச்சு தயாரிப்பாளர் மாற்றமா? களத்தில் குதிக்கும் ஏவிஎம்!
, சனி, 7 நவம்பர் 2020 (18:25 IST)
முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதுபற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தன் நடிப்புத் திறனாலும், படங்களின் தேர்வாலும் கவனம் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை ஒரிஜினல் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தை இயக்க சசிகுமாரே சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரிப்பை குறை... கமலையே முறைத்த பாலாஜி - இருக்கு இன்னைக்கு சம்பவம்!