Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தயாரிப்பாளராகும் அட்லி…. இயக்குனராகும் எழுத்தாளரின் மகன்!

மீண்டும் தயாரிப்பாளராகும் அட்லி…. இயக்குனராகும் எழுத்தாளரின் மகன்!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:54 IST)
இயக்குனர் அட்லியோடு குறும்பட காலத்தில் இருந்தே நண்பராகவும் உதவியாளராகவும் இருந்து வருபவர் சூர்யா பாலகுமாரன்.

எழுத்தாளர் பாலகுமாரனின் மகனான சூர்யா பாலகுமாரன், அட்லியோடு ஆரம்ப காலகட்டம் முதலே உதவியாளராகவும், அவரின் படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது சூர்யா பாலகுமாரன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தை அட்லி தன்னுடைய ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளார்.

அட்லி ஏற்கனவே தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் அட்டர் ப்ளாப் ஆனதால் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது தன்னுடைய உதவியாளருக்காக மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆமை வேகத்தில் படமாக்கும் வெற்றிமாறன்… விடுதலை ஷூட்டிங் அப்டேட்!