Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘செஞ்சுட்டா போச்சு’…பிகில் ராயப்பனை வைத்து தனிப்படமா? அட்லி Tweet!

Webdunia
புதன், 25 மே 2022 (16:30 IST)
விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார் அட்லி.

விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து விஜய்யின் மார்க்கெட்டை விரிவாக்கியவர் அட்லி. இந்த படங்களின் வெற்றியின் மூலமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய்யுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மற்ற சில ஹீரோக்களும் அவரிடம் கதைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் பண்ன உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமூகவலைதளப் பக்கமான டிவிட்டரில் ‘ராயப்பனை வைத்து ஒரு முழுக்கதையை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?’ என்று அமேசான் ப்ரைம் டிவீட் செய்ய, அதை ஷேர் செய்துள்ள அட்லி பிகில் படத்தில் விஜய் பேசும் வசனமான “செஞ்சுட்டா போச்சு” என்று கூறி டிவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments