Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

Advertiesment
அட்லி

vinoth

, செவ்வாய், 24 ஜூன் 2025 (11:24 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆறு முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபிகா படுகோன் மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் மும்பையில் நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அல்லு அர்ஜுன் மூன்று மாதங்கள் மும்பையில் தங்கி முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி முடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!