Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாய்… ஆர்யா டுவீட்

கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாய்… ஆர்யா டுவீட்
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:59 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என திரைப்பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிவாளனுக்கு ஆதரவாக, கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாய் எனப்  பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் எந்த இடையூறும் இல்லை என உச்சநீதிமன்ற கூறிய பிறகும் ஆளுனர் இது தொடர்பான ஒப்புதல் வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் கட்சிகள் அவரை விடுதலை செய்ய ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பல ஆண்டு காலமாக நீதிக்காக காத்திருக்கும் அவரை இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுனரிடம் தமிழக முதல்வர் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேகையும் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்’’நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்... சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான். #ReleasePerarivalan’’#ReleasePerarivalan


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்: இணையத்தில் வைரல்!