சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

vinoth
திங்கள், 24 நவம்பர் 2025 (10:02 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் அதிகப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ரசிகர்களின் அன்புத் தொல்லை குறித்துப் பேசியுள்ளார். அதில் “திருமண விழாக்களுக்கு சென்றால் அங்கே சாப்பிடக் கூட முடியாது. ரசிகர்கள் வந்து புகைப்படம் வேண்டும் என்று கேட்பார்கள். இதனால் நான் திருமண விழாக்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவேன். இது போன்ற சம்பவங்கள் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தன.

இதுபோல வெளிநாட்டில் பிரபலங்களிடம் கேட்டார் அவர்கள் வெளிப்படையாக மறுத்துவிடுவார்கள். அதனால் ரசிகர்கள் கேட்பதே இல்லை. இந்திய பிரபலங்கள் மென்மையாகப் பேசுவார்கள் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன் முகம்தான் அதற்கு சரியாக இருக்கிறது… ஆனந்த் எல் ராயை செல்லமாகக் கோபித்த தனுஷ்!

வார நாட்களிலும் பெரிதாக ஏறாத வசூல்… மாஸ்க் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம்!

பூஜையோடு தொடங்கிய பிரபாஸின் ‘ஸ்பிரிட்’… சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிரஞ்சீவி!

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்