Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படிப்புக்கும் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்பது தாமதமாகதான் புரிந்தது- அனுபமா பரமேஸ்வரன் கருத்து!

Advertiesment
அனுபமா பரமேஸ்வரன்

vinoth

, வெள்ளி, 3 அக்டோபர் 2025 (12:53 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை  கைநீட்டி அழைத்துக் கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அவர் ‘தில்லு ஸ்கொயர்’ என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அனுபமா மேல் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சிறு வயது முதல் நடிகை ஆகவேண்டும் என்று தனக்குள் இருந்த ஆசையைப் பற்றி பேசியுள்ளார். அதில் “என் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தால்தான் நாடகங்களில் நடிக்க அனுமதிப்பார்கள். நன்றாகப் படிப்பவர்களால்தான் வசனங்களை மனப்பாடம் செய்து பேசமுடியும் என சொல்வார்கள். நான் பள்ளியில் முதல் மாணவி எல்லாம் இல்லை. அதனால் என்னால் நடிக்க முடியாமல் போய்விடுமோ என அஞ்சினேன். ஆனால் படிப்புக்கும் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்பதைத் தாமதமாகதான் புரிந்துகொண்டேன்” எனப் பேசியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இணைந்த சத்யராஜ்!