Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் – மேலும் 2 நாயகிகள் !

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (09:15 IST)
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மேலும் 2 நாயகிகள் புதிதாக இணைந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாவலைப் படமாக்கும் தனது கனவுத்திட்டத்தை இப்போது கையில் எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் மேலும் 2 நாயகிகளாக அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் இயக்குனர் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments