Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் கூறிய வின்டா நந்தா மீது ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு அலோக்நாத் வழக்கு..

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:47 IST)
பாலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகர் அலோக்நாத் மீது எழுத்தாளரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான வின்டா நந்தா பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்தார்.

 
இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் அலோக்நாத். இந்நிலையில்  வின்டா நந்தா மீது மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அலோக்நாத்.
 
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 
வின்டா நந்தாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் வீட்டிலும், வெளியிலும் என்னுடைய நன்மதிப்பு குலைந்துவிட்டது. அபாண்டமான குற்றச்சாட்டால்  மிகுந்த மனவேதனையில் தவிக்கின்றேன். எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை வின்டா நந்தா என் மீது சுமத்தி உள்ளார்.  எனவே என்னிடம் வின்டா நந்தா மன்னிப்பு கேட்க வேண்டும், எனக்கு அவர்  ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அலோக்நாத்தின் மனைவி அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்