Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (16:56 IST)
தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் குறித்த வழக்கில், சற்றுமுன் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில், பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் கைது செய்த தகவலுடன், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படும் தகவல் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments