Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Prasanth Karthick
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (16:12 IST)

தனது ரசிகரை கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்காக 6 வார இடைக்கால ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். 

 

அதற்கு கர்நாடக ஐகோர்டு அனுமதி வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 

ALSO READ: காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!
 

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் இருந்த நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments