Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இரவு முழுவதும் கழித்த அல்லு அர்ஜுன்… காலையில் விடுவிப்பு!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (07:43 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற விசாரணைக் காவல் விதிக்கப்பட்டது.

உடனடியாக அவர் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க்கப்பட்டது. ஆனாலும் அவர் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு இன்று காலைதான் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீன் கிடைத்தாலும் அதற்கான விதிமுறைகள் முடிந்து அவர் ரிலீஸாவதற்குத் தாமதம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அடுத்த கட்டுரையில்
Show comments