கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரசாந்த் நீல் அடுத்தடுத்து பேன் இந்தியா நடிகர்களோடு இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் ராவணம் என்ற ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.