Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெப்போட்டிஸம் பிரச்சனை…. ராஜமௌலி படத்தின் வாய்ப்பை இழக்கும் நடிகை?

நெப்போட்டிஸம் பிரச்சனை…. ராஜமௌலி படத்தின் வாய்ப்பை இழக்கும் நடிகை?
, வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:07 IST)
நடிகை ஆலியா பட் இப்போது ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் வாரிசு நடிகர்களின் அரசியல் முக்கிய காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. அதில், கரண் ஜோகர், ஆலியா பட், மகேஷ் பட், சோனம் கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்கள் நேரடியாக சுஷாந்த்தை புறக்கணித்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது தங்களது வெறுப்பை காட்ட ஆரம்பித்த சுஷாந்தின் ரசிகர்கள் அவரக்ளை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இதில் அதிகமாக வெறுக்கப்பட்ட நடிகையாக ஆலியா பட் இருக்கிறார். இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவாகும் சதக் 2 டிரைலர் அதிகம் பேரால் டிஸ்லைக் செய்யப்பட்ட டிரைலராக மாறியுள்ளது. இந்நிலையில் அவரை வைத்து தெலுங்கில் ஆர் ஆர் ஆர் படத்தை எடுத்து வரும் ராஜமௌலி அவரைத் தூக்கி விட்டு வேறு நடிகையை வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்து வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சகட்ட கவர்ச்சி… இணையத்தைக் கலக்கும் ராய் லட்சுமியின் டிரைலர்!