Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்… 18 ஆண்டுகால வழ்க்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார்!

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்… 18 ஆண்டுகால வழ்க்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார்!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:41 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் ஷூட்டிங்கில் 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

நடிகர் அக்‌ஷ்ய் குமார் நடிப்பில் தற்போது பெல் பாட்டம், லக்‌ஷ்மி பாம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராகவா லாரன்ஸ் இயக்கும் லஷ்மி பாம் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு பெல்பாட்டம் படத்துக்காக நெதர்லாந்துக்கு படக்குழுவினரோடு சென்றுள்ளார் அக்‌ஷய்குமார்.

அந்த நாட்டு விதிகளின் படி கொரோனா தொற்று அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த, அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே கலந்துகொள்வேன் என்ற முடிவில் இருந்த அவர் இப்போது 14 மணிநேரம் வரை நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளாராம். மேலும் படக்குழுவை இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா கச்சேரியில் பாடும் இந்த பிரபலம் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!