Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாலினி அஜித் பெயரில் போலி சமூகவலைதளக் கணக்கு… ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

ஷாலினி அஜித் பெயரில் போலி சமூகவலைதளக் கணக்கு… ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

vinoth

, செவ்வாய், 4 ஜூன் 2024 (14:51 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவர் தன் குடும்ப சம்மந்தப்பட்ட புகைப்படங்களை அதில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் ஷாலினி பெயரில் எக்ஸ் தளத்தில் போலி  கணக்கு ஒன்று தொடங்கப்படவே, ரசிகர்கள் பலரும் அதை பாலோ செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து அந்த போலி அக்கவுண்ட் தன்னுடையது இல்லை எனக் கூறி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார் ஷாலினி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளைக் கவர்ந்த குரங்கு பெடல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!