Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழை மக்களின் பசி போக்கிய அஜித் ரசிகர்கள் …

ஏழை மக்களின் பசி போக்கிய அஜித் ரசிகர்கள் …
, வெள்ளி, 21 மே 2021 (16:23 IST)
இந்தக் கொரொனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் பசிபோக்க அஜித் ரசிகர்கள் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் 'பசித்தால் எடுத்துக்கொள்'  என்ற போர்டு வைத்து தள்ளுவண்டியில் சாப்பாடு பழங்கள், பிஸ்கட் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து, பசி என்று வரும் ஏழைகள் அதை எடுத்துச் செல்லும் வகையில் உதவிவருகின்றனர்.

இதைப்பார்த்து மக்கள் அஜித் ரசிகர்களைப் பாராட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்ச நாளைக்கு பாலிவுட் வேண்டாம்…. பிரபுதேவா எடுத்த முடிவு!