Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இயக்குனர் ஆகும் ஐஸ்வர்யா … கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த்!

மீண்டும் இயக்குனர் ஆகும் ஐஸ்வர்யா … கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த்!
, புதன், 21 செப்டம்பர் 2022 (15:30 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் அவர் இப்போது உடனடியாக ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் திரையரங்கம் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!