Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் திரையரங்கம் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் திரையரங்கம் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!
, புதன், 21 செப்டம்பர் 2022 (15:25 IST)
தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக ரிலீஸாகிறது. இந்நிலையில் காஷ்மீரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலால் மூடப்பட்ட திரையரங்கு ஸ்ரீநகரில் இப்போது மல்டிப்ளக்ஸ் திரையரங்காக திறக்கப்படுகிறது. மூன்று திரைகளை கொண்டிருக்கும் இந்த திரையரங்கில் முதலில் 2 திரைகள் செயல்பட உள்ளது.

இதில் முதல் படமாக செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டு திரைகளில் ரிலீஸாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளருக்காக எடுத்த முடிவு!