Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸ்டாகிராமில் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமே அந்த பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

Advertiesment
இன்ஸ்டாகிராமில் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமே அந்த பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

vinoth

, புதன், 6 நவம்பர் 2024 (08:06 IST)
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வந்த அவரின் பிறந்தநாளைக் கூட பச்சன் குடும்பம் கொண்டாடவில்லை.

இதனால் அவர்கள் விவாகரத்து செய்யப்போவது உறுதி என்பது போல செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவரான அபிஷேக் பச்சனை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார் என்ற தகவல் பரவி வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து ஹிட் பட இயக்குனர்களுக்குத் தூண்டில் போடும் தனுஷ்..!