Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் என்பதால் குறிவைக்கப்படுகிறேன்… நடிகை ராகினி திரிவேதி ஆதங்கம்!

Advertiesment
கன்னட் நடிகை
, வெள்ளி, 18 ஜூன் 2021 (13:11 IST)
போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகை ராகினி திரிவேதி.

சமீபத்தில் ஒரு போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திரிவேதியும் சிக்கி கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னர் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு செல்ல மறுத்தார். இந்நிலையில் கைதுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் தான் ஒரு பெண் என்பதால் குறிவைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக ‘நம்முடைய சமூக அமைப்பில் பெண்களை எளிதாகக் குறிவைக்க முடியும். எனக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கை பகிர்ந்து ட்ரண்ட் செய்தார்கள். என்னைப் பற்றி தெரியாதவர்கள் எழுதியதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை என் நடிப்புக்காக விரும்பும் ரசிகர்கள் இருக்கிறார். என் மோசமான காலகட்டத்தை மறக்கடிக்க செய்யும் ரசிகர்கள் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பிறந்தநாளில் தளபதி 65 பர்ஸ்ட் லுக்?