Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

vinoth
சனி, 22 மார்ச் 2025 (08:25 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் பாலிவுட்டைத் தவிர்த்து கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

அதன் பின்னர் அவரே இயக்கி நடித்து, தயாரித்த ‘எமர்ஜென்ஸி’ படம் ரிலீஸாகி அதுவும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மாதவனோடு இணைந்து தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தேசிய விருதுகள் உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றுள்ள கங்கனா, அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் “ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருதில்லை. அதை அமெரிக்கர்களே வைத்துக்கொள்ளட்டும். நமக்கு தேசிய விருதுகளே போதும். ஒவ்வொரு இந்தியனுக்கும் அதுதான் பெரிய விருது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments