நடிகை அபிநயா தனது காதலர் கார்த்திக்குடன் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்று வருகின்றார்.
2009 ஆம் ஆண்டு, சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அபிநயா. பின்னர் "ஈசன்", "ஏழாம் அறிவு", "வீரம்", "தனி ஒருவன்", "தடையற காக்க", "குற்றம் 23", "நிசப்தம்" மற்றும் "விழித்திரு" போன்ற படங்களில் நடித்துள்ள அவர். தற்போது நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
அவருக்கும் அவரது காதலர் கார்த்திக்கும் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்ததாக, ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று அவர்கள் திருமணம் நடத்தப்பட்டது. இன்று, அபிநயா தனது இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளாா், இது ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றுள்ளது.