ஆன்லைன் பந்தய விளம்பரம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் CID விசாரணை!

Mahendran
புதன், 12 நவம்பர் 2025 (15:43 IST)
சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், நடிகர் விஜய் தேவரகொண்டா தெலங்கானா மாநிலக் குற்ற புலனாய்வு துறையின் முன் விசாரணைக்காக ஆஜரானார்.
 
சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. CID-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த செயலிகள் இளைஞர்களை எளிதில் பணம் சம்பாதிக்க ஆசை காட்டி, நிதி இழப்பையும், சில சமயங்களில் தற்கொலைகளையும் தூண்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
 
முன்னதாக, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையிடம் ஆஜரானபோது, தான் ஒரு கேமிங் செயலியை மட்டுமே ஆதரித்ததாகவும், பந்தய செயலிகளுடன் தொடர்பு இல்லை என்றும் விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்திருந்தார்.
 
இதே வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கும் CID சம்மன் அனுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ரோ கோட் டைட்டிலுக்கான தடையை நீக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

கும்கி 2 படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை…!

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments