Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சோனு சூட் மத்திய அரசுக்கு கோரிக்கை

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (21:04 IST)
இந்தியாவில் கொரொனா நோய்த் தொற்றுப் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தம் வாழ்வாரத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.

அரசும் தன்னார்வலர்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும்,  சினிமா நட்சத்திரங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலத்தில்  வெளிநாட்டில் சிக்கித் தவித்த மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர விமான உதவி,  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் புக் செய்து சொந்த மாநிலம் செல்ல உதவி,  விவசாயிகள், மாணவிகளுக்கு உதவி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சூப்பர் ஹீரோவாகவும் மனித நேயமுள்ளவராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் சோனுசூட்.

இன்று மட்டும் இவரிடம் 32, 000 பேர் உதவிகள் செய்யும்படி கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தன்னால் முடிந்தவரை எல்லோருக்கும் உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோனு சூட், கொரோனா சூழலை கருத்திக் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மாணவர்களின்  பாதுகாப்பைக்  கருத்தில் கொள்ள வேண்டும்; இந்ஹ்ப்டக் கொரோனா காலத்தில் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments