Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ சாகுற வரைக்கும் கன்னி கழியா கட்ட பிரம்மச்சாரி தான் - பிரேம்ஜிக்கு சாபம் விட்ட நடிகர்!

Advertiesment
நீ சாகுற வரைக்கும் கன்னி கழியா கட்ட பிரம்மச்சாரி தான் - பிரேம்ஜிக்கு சாபம் விட்ட நடிகர்!
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:54 IST)
கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி அமரன் சிம்புவின் வல்லவன் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் அவரின் நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகவே, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இடையில் சில படங்களுக்கு இசையமைத்த அவர் இரு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். தற்போது சிம்புவோடு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி ட்விட்டரில் ”உங்கள் மனைவியை மதிக்காத பெண்ணுடன் ஒரு போதும் டேட்டிங் செய்யாதீர்" என கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதற்கு காமெடி நடிகர் சதிஷ், " நீ கடைசி வரை கட்ட பிரம்மச்சாரி தான்" என்று கலாய்த்து ரிப்ள்ளை செய்ய இணையவாசிகள் அத்தனை பேரும் குலுங்க குலுங்க சிரித்து வருகின்றனர். பிரேம்ஜி ஏற்கனவே கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்திய குடும்பத்தினரிடம் தனக்கு திருமணமே வேண்டாம், குழந்தை குட்டிலாம் தேவையில்லை தனியாக வாழ்வதே ஹேப்பி என பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளியலறையில் நடிகர் ஒருவருடன் ராய் லட்சுமி - வைரலாகும் சர்ச்சை போஸ்டர்!