Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவரா? திடீர் முடிவை எடுத்த ஷங்கர்

வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவரா? திடீர் முடிவை எடுத்த ஷங்கர்
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:41 IST)
இயக்குனர் ஷங்கர் வேள்பாரி நாவலை தழுவி ஒரு படத்தை உருவாக்க உள்ளார்.

இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் பாரியாக நடிக்க சூர்யா, யாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரண்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இயக்குனர் ஷங்கரின் இந்த திடீர் முடிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர் நாயகி அல்ல TRP எகிற வைக்கும் நாயகி... வெள்ளி வெண்பாவுக்கு குவியும் லைக்ஸ்!