Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரிமுத்துவின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் இரங்கல்!

மாரிமுத்துவின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் இரங்கல்!
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:40 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வரும் மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். நடிகராக அறியப்படும் மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவா என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆனால் அதிலெல்லாம் அடையாத புகழை அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பெற்றார். அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதபாத்திரத்தில் நடிக்க, அந்த கதாபாத்திரம் வைரலானது.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து பேசியுள்ள எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் “அவரின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. டப்பிங்கை முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக சொன்னார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து இப்படி ஆகியிருந்தால் அது வேறு. இது அவரின் குடும்பத்தினர் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினருக்கு மிகப்பெரிய இழப்பு” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லால் சலாம் படத்தின் டப்பிங் தொடக்கிய சூப்பர் ஸ்டார்