போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்னொரு நடிகரான கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. கேரளாவில் தலைமறைவான அவரை தனிப்படை போலீஸார் சென்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் இருந்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டுக்கு அழிக்கப்பட்டுள்ளன. அவர் செல்ஃபோனில் சில code wordகளைப் பயன்படுத்தி நண்பர்கள் வட்டாரத்தில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சங்கேத வார்த்தைகள் போதைப் பொருள் பரிமாற்றம் சம்மந்தப்பட்டனவா என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.