Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகர் கருணாஸ்!

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (20:45 IST)
முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.
 
இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
 
அவரது பேச்சுக்கு நடிகரும் ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து, இன்று தென்னிந்திய நடிகர் சங்கமும் முன்னாள் அதிமுக  நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
 
இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னையும், திரிஷாவையும் தொடர்புபடுத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம்   நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments