Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணை பாதியில் இறங்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

dharmapuri

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (19:18 IST)
தர்மபுரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 
தருமபுரி மாவட்டம்  நவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை( 59). இவர் அப்பகுதியில் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொறித்து விற்பனை செய்து வருகிறார்.
 
நேற்று  அரூரில் இருந்து நவலை செல்லும்போது அரூர் அருகே பாத்திரத்தில் மாட்டிறைச்சி  வைத்திருந்த பாஞ்சாலை பேருந்தில் இருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதியிலேயே இறக்கிவிட்டனர்.
 
இதனால் பாஞ்சாலை  3கிமீ தூரம் நடந்தே ஊருக்கு வந்துள்ளார். இதுகுறித்து  போக்குவரத்துத்துறைக்குப் புகார் சென்ற நிலையில், பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸார் நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு?