Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் அமீரை நினைவு கூர்ந்து பேசிய நடிகர் கார்த்தி..!

இயக்குனர் அமீரை நினைவு கூர்ந்து பேசிய நடிகர் கார்த்தி..!
, திங்கள், 30 அக்டோபர் 2023 (14:14 IST)
ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினர். இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் கார்த்தியின் முதல் படத்தை இயக்கி அவருக்கு வாழ்க்கைக் கொடுத்த இயக்குனர் அமீர் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பருத்திவீரன் ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது கார்த்தி இயக்குனர் அமீரை நினைவுகூர்ந்து பேசினார். அதில் “நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் அமீர் அண்ணாதான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் 170 படத்தின் மும்பை ஷூட்டிங் நிறைவு… சென்னை திரும்பிய படக்குழு!