Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

Advertiesment
அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

vinoth

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:21 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

தற்காலிகமாக ‘DD4’ என அழைக்கப்படும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராஜ்கிரண் நடிப்பது ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘இட்லி கடை’ என்று பெயர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!