Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னைக்கு வராமலேயே டப்பிங் முடித்த தனுஷ்… விரைவில் திருச்சிற்றம்பலம் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னைக்கு வராமலேயே டப்பிங் முடித்த தனுஷ்… விரைவில் திருச்சிற்றம்பலம் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:45 IST)
நடிகர் தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் மற்றும் புதுச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை இப்போது தனுஷ் ஹைதராபாத்தில் இருந்தே முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தனுஷ் சென்னைக்கு வராததால் அங்கிருந்தபடியே டப்பிங் பணிகளை முடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவை நம்பி நடிக்க ஒத்துக்கிட்டது தப்போ? கௌதம் கார்த்திக் புலம்பல்!