நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

Siva
புதன், 30 ஏப்ரல் 2025 (14:34 IST)
நடிகர் அஜித்குமார் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம், டெல்லியில் பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அஜித்குமார், குடும்பத்துடன் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
 
இந்த நிலையில், அஜித்குமாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
அவருக்கு வழக்கமான மருத்துவ சோதனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments