இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.
சில மாதங்களுக்குப் படங்களை ஓடிடிக்குக் கொடுப்பதில் கால இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வருவார்கள் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இப்போது அவர் சித்தாரா ஸமின் பார் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இம்மாதம் ரிலீஸாகவுள்ளது.
இதையடுத்து அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விரைவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் “ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கவுள்ளேன். அதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும்” எனக் கூறியுள்ளார். லோகேஷ் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி என்ற படத்தை இயக்கவுள்ளதாக முன்பு அறிவித்தார். அந்த கதையைதான் தற்போது அமீர் கானை வைத்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.