தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.
அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடித்துள்ள டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்க அந்த படம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸானது. ஆனால் பெரியளவில் எந்த தாக்கத்தையும் அந்த படம் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் தன்னுடைய அடுத்த தமிழ் படம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும், அதில் ரவி மோகன் (ஜெயம் ரவி) கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தை வேல்ஸ் இண்டரநேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.