Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்! – ஐஸ்வர்யா ராஜேஷின் கருணை உள்ளம்!

Aishwarya Rajesh
, திங்கள், 16 அக்டோபர் 2023 (08:29 IST)
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
 


 
பல வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். 

 காவல் உதவி ஆணையர் (அடையாறு வட்டம்) - திரு. நெல்சன்,  துணை ஆட்சியர் - திருமதி ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு, கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானி மிருனாள் தாக்கூர் நடிக்கும் ‘ஹாய் நான்னா’ படத்தின் ஃபீல் குட் டீசர் ரிலீஸ்