Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (18:26 IST)
தென் மாவட்டங்களில் சாதி மோதலை தூண்டுகிறார் என இயக்குனர் பா ரஞ்சித் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பரமக்குடி டிஎஸ்பி இடம் தென் தமிழக கட்சி மாநில உரங்களுக்கான புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பா.ரஞ்சித்தின் பதிவு  தென் மாவட்டங்களில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் இருக்கிறது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 ஏற்கனவே பா ரஞ்சித் சகோதரர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது பா. ரஞ்சித் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments