Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு..!

PonniyinSelvan2
, வியாழன், 30 மார்ச் 2023 (17:58 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை திரித்து மணிரத்தினம் எடுத்துள்ளதாக கூறிய தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் பொன்னின் செல்வன் படத்தில் வரலாறு திரிக்கப்பட்டதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது கல்கி நாவலை தான் படிக்கவில்லை என மனுதாரர் கூறினார் 
 
இதனை அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்காத மனுதாரர் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்!