Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர்ஸ்டாரின் பங்களாவில் பதுங்கிய 2 மர்ம இளைஞர்கள் கைது...

Advertiesment
பதான்
, புதன், 8 மார்ச் 2023 (17:54 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பங்காவில் நுழைந்து பதுங்கியிருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில், ஜனவரி மாதம் தேதி வெளியான படம் பதான். இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து, தொடர்ந்து தோல்வியடைந்த வந்த பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,மும்பையிலுள்ள ஷாருக்கானின் மன்னத் என்ற பிரமாண்ட பங்களாவின் 3- வது மாடியில் உள்ள அவரது மேக்கப் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து 2 இளைஞர்கள் பதுங்கி இருந்தனர்.

இதுபற்றி, ஷாருக்கானின் மேலாளர் கல்லீன் டிசோசா  புகாரளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்  2 இளைஞர்களைக் கைது செய்தனர்.

அந்த இளைஞர்கள், இருவரும் சுவர் தாண்டி, பங்களாவுக்குள் குதித்து,  அதிகாலை 3 மணிக்கு 3 வது தளத்திற்குச் சென்று காலை 10:30 மணி வரை காத்திருந்துள்ளனர் என்று மேலாளர் போலீஸில் கூறியுள்ளார்.

2 இளைஞர்களைப் பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பங்களாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் 2 பேர் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருவதாகத்  தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர் நீச்சல் சீரியல் புகழ் கனிகாவுக்கு நடந்த விபத்து… அவரே வெளியிட்ட புகைப்படம்!