Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பொன்னியின் செல்வன் மூலமாக நிறைய கனவுகள் நிறைவேறியுள்ளன…” ஜெயம் ரவி மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான “பொன்னி நதி” பாடல் நேற்று வெளியானது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சி சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. அதில் படக்கலைஞர்கள் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜெயம் ரவி “இந்த படத்தை எத்தனையோ லெஜண்ட்கள் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் மணிரத்னத்தால் மட்டுமே அது முடிந்தது. சந்திரலேகா படம் போல பிரம்மாண்டமான ஒரு படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் நான் நடித்ததில்லை. அந்த கனவு இந்த படம் மூலமாக நிறைவேறியுள்ளது. அதுபோல பல கனவுகள் இந்த படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளன” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments