Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரண்மனை நான்காவது பாகமா? மீண்டும் ஹிட் படத்தைக் கையில் எடுக்கும் சுந்தர் சி!

அரண்மனை நான்காவது பாகமா? மீண்டும் ஹிட் படத்தைக் கையில் எடுக்கும் சுந்தர் சி!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:04 IST)
இயக்குனர் சுந்தர் சி தற்போது காஃபி வித் காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இரண்டாவது படம் வெளிவந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாப் ஆனது. ஆனாலும் இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்க சுந்தர் சி இப்போது முனைப்புக் காட்டி வருகிறார்.

தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காஃபி வித் காதல் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அரண்மனை 4 தொடங்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் அவர் அதற்கான வேலைகளை செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. அரண்மனை படத்தின் முதல்பாகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!