Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிதா மகனுக்கு பிறகு பாலாவோடு இணைந்த ஒளிப்பதிவாளர்!

பிதா மகனுக்கு பிறகு பாலாவோடு இணைந்த ஒளிப்பதிவாளர்!
, திங்கள், 28 மார்ச் 2022 (14:59 IST)
சூர்யா பாலா இணையும் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே பாலாவோடு பிதாமகன் படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ராதே ஷ்யாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!